டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் நாசிக் கிளை தொடர்பான பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்றப் புகார் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிதா கான், 25 நாட்கள் தலைமறைவுக்குப் பிறகு சத்ரபதி சம்பாஜி நகரில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் நாசிக் பிபிஓ கிளையில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிதா கான், பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
25 நாட்கள் தலைமறைவு.. கடைசியில் சிக்கிய TCS நிதா கான்
