தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கலைத்துறையினரின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில், நடிகர் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கருப்பு’ திரைப்படத்திற்குச் சிறப்பு காட்சிகளைத் திரையிடத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
இது சூர்யா ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ விடுத்த கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் விஜய் இந்தச் சலுகையை வழங்கியுள்ளார்.
சூர்யா ரசிகர்களுக்கு ஜாக்பாட்: ‘கருப்பு’ படத்திற்கு 2 நாள் ஸ்பெஷல் ஷோவிற்கு அனுமதி
