சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்தோனேசிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ சுபியாண்டோவுடன் ஏப்ரல் முதல் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், நெடுநோக்கு மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் சீன மற்றும் இந்தோனேசிய உறவை சீனத் தரப்பு அணுகி வருகின்றது.
இந்தோனேசியாவுடன் விரிவான நெடுநோக்கு ரீதியிலான ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் அதிகமான நன்மைகள் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார்.பிரபோவோ கூறுகையில், இந்தோனேசிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தனது முதல் நாடான சீனாவில் மேற்கொள்வதை மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.
முக்கிய செல்வாக்கு உடைய பெரிய நாடான சீனா, இந்தோனேசியாவுடன், ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து, சமமாக நடத்தி வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளின் வளர்ச்சி நெடுநோக்கு திட்டங்களை இணைப்பதை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவதோடு, வர்த்தகம், பொருளாதாரம், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைகளில் மேலும் அதிகமான சாதனைகளைப் படைக்க இந்தோனேசியாவின் புதிய அரசு விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.