இந்தியாவின் மிக முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான மும்பை – அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மாதிரிப் புகைப்படத்தை இந்திய ரயில்வே அமைச்சகம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.
புது டெல்லியில் உள்ள மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கேட் எண் 4 இன் அருகில், பொதுமக்களின் பார்வைக்காக இந்த அதிவேக ரயிலின் பிரம்மாண்டமான படம் முறைப்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏரோடைனமிக் வடிவமைப்பில், நேர்த்தியான வெள்ளை மற்றும் துடிப்பான ஆரஞ்சு நிறங்கள் கலந்த கலவையில் காட்சியளிக்கும் இந்த ரயிலின் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்
