அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா AI-171 விமான விபத்தில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை இழந்த ரோமின் வோஹ்ரா என்ற இளைஞர், விபத்திற்குப் பிறகு அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் மார்ச்சுவரியில் தான் கண்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகளைத் தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளார்.
லண்டன் நோக்கிப் புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், அகமதாபாத் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த தங்களின் அத்தை, சகோதரர் மற்றும் மூன்று வயது மருமகளை அடையாளம் காண வோஹ்ரா மார்ச்சுவரியினுள் நுழைந்தபோது அங்கு உடல்கள் சிதறிக்கிடந்த கோர நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: வெளியான அதிர்ச்சித் தகவல்
