தமிழகத்தில் ஒட்டுமொத்த மாணவச் செல்வங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியாகின.
இந்தாண்டு ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதம் 94.31 சதவீதமாகப் பதிவாகியுள்ள சூழலில், வழக்கம் போல் மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளி மாணவிகளே முதலிடம் பிடித்து அசுர சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட வாரியான ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% பெற்று தமிழ்நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31% பேர் தேர்ச்சி பெற்று சாதனை!
