மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – இபிஎஸ் கேள்வி!

Estimated read time 0 min read

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட பூமி பூஜை மேற்கொள்ள போவதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறிய நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும், அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளதாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தயவில் தவெக பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ள இபிஎஸ்,

மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது ? என வினா தொடுத்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என கவலை தெரிவித்த இபிஎஸ்,

இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author