
ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடுகிறது. அதன் அடிப்படையில் வங்கிச் சேவைகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், UPI, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் ஏடிஎம் சேவைகள் போன்ற டிஜிட்டல் வங்கிச் சேவைகள் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து கிடைக்கிறது. ஆகையால், இதற்கு ஏற்றவாறு உங்களின் முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.
ஜூன் 2026-ல் நாடு முழுவதும் உள்ள முக்கிய வங்கி விடுமுறை நாட்களில் இரண்டாவது சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகியவை அடங்கும். ரிசர்வ் வங்கி விதிகளின்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். இந்த முறை ஜூன் மாதத்தில், இரண்டாவது சனிக்கிழமை ஜூன் 13 அன்றும், நான்காவது சனிக்கிழமை ஜூன் 27 அன்றும் வருகிறது. இது தவிர, பல மாநிலங்கள் மற்றும் பெருநகரங்களில் உள்ள வங்கிகள், மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 26 அன்று மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூன் 2026-இல் உள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:
ஜூன் 7 – ஞாயிற்றுக்கிழமை,
ஜூன் 13 – இரண்டாவது சனிக்கிழமை,
ஜூன் 14 – ஞாயிற்றுக்கிழமை,
ஜூன் 21 – ஞாயிற்றுக்கிழமை,
ஜூன் 26 – மொஹரம் (பல மாநிலங்களில்),
ஜூன் 27 – நான்காவது சனிக்கிழமை,
ஜூன் 28 – ஞாயிற்றுக்கிழமை.
இந்த விடுமுறை நாட்கள் சில நாட்களுக்கு வங்கி கிளைகளின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும். இதன் விளைவாக, காசோலை பரிவர்த்தனை, பண வைப்பு, வரைவோலைகள் மற்றும் பிற வங்கி சேவைகளில் தாமதங்கள் ஏற்படலாம்.
ஜூன் மாதத்தில் சில பிராந்திய பண்டிகைகள் மற்றும் ஜெயந்திகள் காரணமாக சில மாநிலங்களில் கூடுதல் வங்கி விடுமுறைகளும் இருக்கும். ஒடிசாவின் புவனேஸ்வரில் ராஜா சங்கராந்தியை முன்னிட்டு ஜூன் 15 அன்றும், மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் YMA தினத்தை முன்னிட்டு ஜூன் 17 அன்றும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஹரியானாவில் மகாராணா பிரதாப் ஜெயந்தியை முன்னிட்டு ஜூன் 17 அன்று விடுமுறை. பஞ்சாபில் ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜி ஷாஹிதி தினத்தை முன்னிட்டு ஜூன் 18 அன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பஞ்சாப், ஹரியானா மற்றும் சிம்லாவில் சந்த் குரு கபீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜூன் 29 அன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கலாம். ஐஸ்வாலில் ரெம்னா நீயை முன்னிட்டு ஜூன் 30 அன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தொடர்ந்து செயல்படும். இதனால், வாடிக்கையாளர்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் 24 மணி நேரமும் செயல்படும். UPI, Google Pay, PhonePe, Paytm, நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் ஏடிஎம் பணம் எடுக்கும் வசதிகள் வழக்கம் போல் தொடரும். ஆன்லைன் பணப் பரிமாற்றங்கள், கட்டணச் செலுத்துதல்கள் மற்றும் இருப்புச் சரிபார்ப்புகளை எளிதாகச் செய்யலாம்.
