கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், பழைய பொறுப்புகளை பயன்படுத்தி விளம்பரப்படுத்தக் கூடாது – இபிஎஸ்

Estimated read time 1 min read

கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், பழைய பொறுப்புகளை பயன்படுத்தி விளம்பரப்படுத்தக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக தலைமை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளைக் கொண்டு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டாம் என்றும், கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தலைமைக் கழகம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் கூறியுள்ளது. எஸ்.பி. வேலுமணி தரப்பினர் மீண்டும் இபிஎஸ்-வுடன் இணைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author