சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், உலக இணையப் பயன்பாட்டாளர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன்படி உளவுத் துறையின் கடப்பாட்டை வலுப்படுத்த முயலும் ஜப்பானிய வலதுசாரி சக்தியின் செயலை 84.8 விழுக்காட்டவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதோடு, சர்வதேசச் சமூகம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமையமைச்சரின் தலைமையிலுள்ள தேசிய உளவுக் கூட்டத்தை மையமாகக் கொண்டு, தேசிய உளவுப் பணியகத்தை செயல் நிறுவனமிக்க உளவு முறைமையாக உருவாக்கி, உளவு அதிகாரத்தை தலைமையமைச்சருக்குத் திரட்டித் தரும் முயற்சியை முன்னேற்ற ஜப்பானிய வலதுசாரி அமைப்பானது முயற்கிறது. இச்செயலானது கட்டற்ற முறையில் அதிகாரத்தை பயன்படுத்தும் சூழலை உருவாக்குவதோடு, கண்காணிப்புப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தும் என்று 77.7 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
போர் எதிர்ப்பில் ஈடுபட்ட அமைதி சக்திகளைத் தடை செய்யும் கருவியாக தேசிய உளவுப் பணியகம் மாறக் கூடும் என்று 73.6 விழுக்காட்டினர் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
