இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 7 எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் முறைப்படி அங்கீகரித்ததைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இப்போது ‘மூன்றில் இரு பங்கு’ பெரும்பான்மையை எட்டும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
