உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ஆம் நாளான இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலை முதலே வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து சுமார் 100 டன் எடையும், 76 அடி உயரமும் , ஐந்து நிலைகளும் கொண்ட திருத்தேரில், கொண்டை முடிச்சு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
அமைச்சர்கள் ரமேஷ், ரஞ்சித் குமார், தென்னரசு மற்றும் ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
