இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மெகா பட்ஜெட்டில் இயக்கி, நடித்து வரும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நேரிட்ட பயங்கர சிலிண்டர் விபத்து, ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி, படப்பிடிப்புத் தள ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் நடிகர் SJ சூர்யா நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
SJ சூர்யாவின் கில்லர் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து; படக்குழு அதிர்ச்சி
