2026ஆம் ஆண்டுக்கான ஐ.நாவின் நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினமாத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜூன் 8ஆம் நாள், காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
இதில் வாங்யீ கூறுகையில்,
3 ஆண்டுகளுக்கு முன்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலக நாகரிக முன்மொழிவை வழங்கி, வேறுபட்ட நாகரிகங்களுக்கிடையில் நல்லிணக்க வளர்ச்சிக்கு வழிகாட்டினார்.
4 தரப்புகளின் மூலம் நாகரிகப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தலாம் என்று சீனா கருத்து வெளியிட்டது. ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிப்பது, மனித முதன்மையைப் பின்பற்றுவது, பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்தில் ஊன்றி நிற்பது, தொடர்பு மற்றும் கூட்டுப் பகிர்வை நிலைநிறுத்துவது ஆகிய 4 தரப்புகள் இதில் அடக்கம்.
2024ஆம் ஆண்டில், சீனா உள்ளிட்ட 83 நாடுகளின் கூட்டு ஆலோசனையை ஒட்டி, ஜூன் 10ஆம் நாள், நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினமாக உறுதிப்படுத்தப்படுவது, ஐ.நா பேரவையின் 78ஆவது கூட்டத் தொடரில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
