சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று உயிரிழந்தார்.
நாடு முழுவதும் மீண்டும் கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் அதற்கான முன்னெச்சரிக்கை ந்டவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. இருப்பினும் கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார். உயிரிழந்த மோகன்(60) பல்வேறு இணை நோய் பாதிப்புக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மறைமலை நகரை சேர்ந்த அவர் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதியானது. நேற்றிரவு வீட்டிலிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கொண்டு கொண்டு செல்லப்பட்டார். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாகவே உள்ளது என சுகாதாரத்துறை கூறிவந்த நிலையில், இன்று கொரோனாவுக்கு மீண்டும் ஒருவர் பலியாகியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.