“அம்மாடியோவ்! 1,2 இல்ல 42 அடி நீல திமிங்கல பிள்ளையார்!”…

Estimated read time 1 min read

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா முற்றிலும் மாறுபட்ட மற்றும் கண்கவர் கலை வடிவங்களுடன் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள விநோத மற்றும் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பொதுமக்களையும் பக்தர்களையும் பெருமளவில் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, பழைய போபால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திரும்பியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, இத்வாரா போக்குவரத்துப் பகுதியில் சுமார் 42 அடி நீளம் கொண்ட பிரம்மாண்டமான நீல திமிங்கலத்தின் அமைப்பின் மீது அமர்ந்திருக்கும் கோலத்தில் விநாயகர் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. நீல நிற மின்விளக்குகள் மற்றும் தங்க நிற கலை வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்தத் தோற்றம் இரவு நேரங்களில் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘போபால் கே ராஜா’ விநாயகர் சிலையும் அதன் நேர்த்தியான கலை வடிவமைப்புடன் பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வருகிறது.

இதுமட்டுமின்றி, போபால் நகரின் வரலாற்றில் முதன்முறையாக ஒற்றைக் காலில் சமநிலைப்படுத்தப்பட்ட ‘பேலன்சிங் பாப்பா’ (Balancing Bappa) என்ற புதிய சிலையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு கைகளுடன் தனது தலையின் மீது சுதர்சன சக்கரத்தை ஏந்தியவாறு ஒற்றைக் காலில் நிற்கும் இந்த அதிநவீன சிலையானது வண்ணமயமான விளக்குகள் மற்றும் புகை விளைவுகளுடன் காட்சியளிக்கிறது. பக்தி உணர்வோடு கலந்திருக்கும் இந்த வித்தியாசமான கலைப் படைப்புகளின் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

You May Also Like

More From Author