வாக்காளர்களுக்கு அண்ணாமலை நன்றி!

நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வந்த அனைத்து வாக்காளர்களுக்கும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகத்தில் நிறைவடைகிறது, நேற்று நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்ய வந்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாக்குப்பதிவின் போது ஊழல் திமுக அரசுக்கு எதிராக அனைத்து வயது வாக்காளர்களும் ஒன்றிணைந்துள்ளது தெரியவந்தாக குறிப்பிட்டுள்ளார். இண்டி கூட்டணியின் பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை தமிழக மக்கள் நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

The first phase of polling for the 2024 Parliament elections ends in Tamil Nadu today & we thank all the voters who came out today to choose their representative in the Parliament.

Today, during the polling, one could witness enthusiasm amongst voters across all age groups as… pic.twitter.com/Lc0LjEExTo

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 19, 2024

 

இந்தியாவின் வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு அரசியலில் தமிழக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தனர் என உறுதியாக நம்புவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author