மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளது

மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது என்று தேமுதிக பொது செயலாளர் இன்று கோயம்பேட்டில் பேட்டியளித்துள்ளார்.
“விஜயகாந்த்க்கு பத்ம பூஷன் வழங்கப்படவுள்ளது, இதற்காக 3 நாட்களுக்கு முன் எனக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. அதனால், நானும் விஜயப்ரபாகரனும் அந்த விருதை பெற டெல்லி செல்ல உள்ளோம்.” என்று என்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார்.
அதன் பிறகு, ஜனவரி மாதம் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author