நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளாங்கண்ணி அடுத்த செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் முருகவேல் முத்து சின்னையன் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது பைபர் படகில் வந்த 3 கடற்கொள்ளையர்கள் முருகனின் படகில் ஏறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் படகில் இருந்த திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.

You May Also Like

More From Author