குறும்பா

ஹைக்கூ ( சென்ட்ரியு ) கவிஞர் இரா .இரவி !

விழிகள் இரண்டு போதவில்லை
சிறகுகள் ரசிக்க
வண்ணத்துப்பூச்சி !

அமர்ந்தாலும் அழகு
பறந்தாலோ அழகோ அழகு
பட்டாம்பூச்சி !

புகை வரும்
நெருப்பின்றி
பனி மூட்டம் !

புல்லின் மீது பனித்துளி
முகம் பார்த்தது
முழு நிலவு !

அம்மாவின் கைமணம் கமழும்
அப்பத்தை நினைவூட்டியது
நிலவு !

கிளைகள் எனும்
கைகள் விரித்து வரவேற்கும்
மரங்கள் !

நிறமோ கருமை
குரலோ இனிமை
குயில் !

கண்டனக் குரல் கொடுத்தன
கூடு கட்டிய பறவைகள்
வெட்டப்படும் மரத்திற்காக !

உடல் நலத்திற்கு நல்லது
அதியமான் அவ்வைக்கு தந்தது
நெல்லிக்கனி !

ஏழைகளின் ஆப்பிள்
ஏழைகளின் வாழ்வாதாரம்
நெல்லிக்காய் !

சிறு துரும்பும்
கூடு கட்ட உதவும்
குருவிக்கு !

கண்களைப் போலவே
மீசையும் அழகு
பூனை !

கழிவு நீர் உறிஞ்சி
இளநீர் தரும்
தென்னை !

கோடையில் வாடி நின்று
கோடைக்கு இதமான நுங்கு தந்தது
பனைமரம் !

இனிமையாக்கியது
பேருந்துப் பயணத்தை
வெள்ளரிக்காய் !

வருடங்கள் உருண்டதை
உணர்த்தின
நரைகள் !

Please follow and like us:

You May Also Like

More From Author