ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனவரி 12 முதல் 13 வரை இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரீட்ரிக் மெர்ஸ்.
அவர் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மெர்ஸை பிரதமர் மோடி வரவேற்றார்.
ஆசிரமத்திற்கு வந்ததும், அவர்கள் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு மலர் அஞ்சலி செலுத்தினர், மேலும் மெர்ஸ் பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இந்தியாவில் ஜெர்மன் அதிபர்: இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன?
Estimated read time
0 min read
