தனது ஜப்பான் பயணத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30), பிரதமர் நரேந்திர மோடிக்குச் செண்டாய் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏராளமான ஜப்பானிய மக்கள், சில இந்திய வம்சாவளியினர் உட்பட, அவரைப் பார்க்கக் கூடி மோடி சான் என்று கோஷமிட்டு வரவேற்றனர்.
பிரதமர் மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் புல்லட் ரயிலில் டோக்கியோவிலிருந்து செண்டாய் நகருக்குப் பயணம் செய்தார்.
அவர் தனது பயணத்தின் படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டு, “செண்டாய் சென்றடைந்தேன். பிரதமர் இஷிபாவுடன் ஷிங்கன்சென் ரயிலில் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.” என்று குறிப்பிட்டார்.
ஜப்பான் பயணத்தின் கடைசி நாளில் பிரதமர் மோடிக்குச் செண்டாயில் உற்சாக வரவேற்பு
