பில்லூர் அணையின் நீர் திறப்பால் பவானி ஆற்றில் வெள்ளம்!

பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்ததால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதன் காரணமாக 94 புள்ளி 5 அடியாக நீர் மட்டம் எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதியும், மின் உற்பத்தி தேவைகளுக்காகவும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ குளிக்கவோ கூடாது என வருவாய் துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author