தமிழ்நாட்டில் ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது.
நேற்றைய தினம் (ஜூலை 1) மதுரை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது.
இதில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டியெடுத்தது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாலும், தமிழகத்தில் நாளை முதல் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் நீலகிரி, கோவை, தேனியில் கனமழை எச்சரிக்கை
