துளிப்பா

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

நானே பெரியவன்
நினைக்கும்போதே
மிகச் சிறியவனாவாய்

சிந்திச் சென்றது
குப்பையோடு மணத்தையும்
குப்பைவண்டி

காசாக்கலாம்
குப்பையையும்
பெயர் எடுத்துவிட்டால்

மணத்தோடு அவள் மனமும்
பரப்பியது
மலர்ந்த மலர்

ஒளிப் பாய்ச்சியது
ஓடியது இருள்
விளக்கு

நீண்ட பிரிவிக்குபின்
சந்திப்பு
கூடுதல் இன்பம்

வெட்கப் பட வேண்டும்
வல்லரசுகள்
சோமாலியா சோகம்

You May Also Like

More From Author