உலக சுற்றுச்சூழல் தினம் – கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், பேரூராட்சி நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனம், மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், மாமல்லபுரம் யோகா மையம் சார்பில் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஓவியங்கள் வரைந்து காட்சிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதனை தொடர்ந்து பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

You May Also Like

More From Author