சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
Category: இந்தியா
மத்திய பிரதேசத்தில் இரு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழா!
மத்திய பிரதேச மாநிலம் பாண்டுர்ணாவில், இரண்டு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழாவில், நூற்றுக்கணக்கான மக்கள் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். கோட்மார் என்ற பெயரில் [மேலும்…]
அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு
இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்த ட்ரம்பின் முடிவு, அமெரிக்காவிலேயே தொடர் கண்டனங்களை பெற்று வருகிறது. தவறான முடிவை ட்ரம்ப் எடுத்து விட்டதாக, [மேலும்…]
அனிஷ் தயால் சிங் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) முன்னாள் தலைமை இயக்குநரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான [மேலும்…]
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனுக்கு மேலும் ஒரு பெரிய உந்துதலாக, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (IADWS) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு [மேலும்…]
8வது ஊதியக் குழு நடைமுறை தாமதம் என தகவல்
மத்திய அரசு ஊழியர்களுக்காக எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) நடைமுறைக்கு வருவது தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர [மேலும்…]
2025 இறுதிக்குள் முதல் Made in India செமிகண்டக்டர் சிப்; மோடி அறிவிப்பு
இந்தியாவின் தொழில்நுட்ப இலக்கு குறித்து முக்கிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அன்று தி எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் [மேலும்…]
ஆவணி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
ஆவணி திருவிழாவை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிரசித்தி [மேலும்…]
விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி
கடந்த 11 ஆண்டுகளில், விண்வெளித் துறையில் மத்திய அரசு பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேசிய விண்வெளி தினத்தை [மேலும்…]
ஆறு நாட்கள் வளர்ச்சிக்குப் பிறகு 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்
இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) உள்வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்தன. கடந்த ஆறு நாட்களில் கண்ட [மேலும்…]
இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் தேவை என்பது முட்டாள்தனம் டிரம்ப் ஆலோசகர் நவாரோ
உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கை வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்தார். இந்தியா சுத்திகரிப்பு ஆலை லாபம் ஈட்டுவதாகவும், அதை [மேலும்…]
