மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000…. இன்று (டிச..1) தேர்வு முடிவுகள் வெளியீடு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பாக முதலமைச்சர்திறனாய்வு தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களும் இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் தேர்வு எழுத ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் இவர்களுக்கான தேர்வு அக்டோபர் ஏழாம் தேதி நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ஆம் தேதி www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களுடைய பதிவு மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட தேர்வு முடிவுகளை காணலாம். இதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்கும் வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

More From Author