அரங்கநாதர் சுவாமிக்கு புனித நீரை கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது!

Estimated read time 0 min read

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் புனித நீரை கொண்டு அரங்கநாதர் சுவாமிக்கு திருமஞ்சனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும் திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் மிகவும் விஷேசமானது.

இந்நிலையில், காவிரி ஆற்றில் இருந்து தங்ககுடம் மற்றும் வெள்ளி குடங்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

புனித நீர் நிரப்பட்ட தங்க குடத்தை கோயில் யானை ஆண்டாள் சுமந்தபடி ஊர்வலமாக வந்தபோது பக்தர்கள் வழிநெடுகிலும் நின்று வணங்கி வழிபட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author