சுமுகமான பெரிய குடும்பத்தை உருவாக்க வேண்டும்:ஷிச்சின்பிங்

 

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஆகஸ்ட் 20ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீனத்தேசிய மக்கள் பேரவையின் பல்வேறு நாடாளுமன்ற ஒன்றியத்தில் கலந்துகொண்ட 40ஆவது அண்டு நிறைவு நிகழ்ச்சியிலும் 6ஆவது வளர்ந்து வரும் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்தாய்வு வகுப்பிலும் கலந்துகொண்ட வெளிநாட்டு நாடாளுமன்றங்களின் தலைவர்களைச் சந்தித்தார்.

பல்வேறு நாடுகளின் நிலைமையில் வித்தியாசம் உள்ள போதிலும், நல்ல சகோதரர்களாவும் கூட்டாளியாகவும் நாம் திகழ்கிறோம். பரந்த அளவில் வளர்ந்து வரும் நாடுகள் நாட்டை நிர்வகிக்கும் அனுபவ பரிமாற்றத்தை வலுப்படுத்தி கூட்டு செழுமை அடைய முயற்சிக்கும் பெரும் ஆர்வத்தை, உங்களின் வருகை காட்டியுள்ளது.

இதற்காக, பகிர்வு எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவோம் என்ற சீன முன்மொழிவை முன்வைத்தேன். சீனா, பல்வேறு நாடுகளுடன் இணைந்து இந்த பூகோளத்தை சுமுகமான பெரிய குடும்பமாக கட்டியமைக்க விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். 

Please follow and like us:

You May Also Like

More From Author