சர்ச்சையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்……. என்னவா இருக்கும்? இணையதளத்தில் பரபரப்பு……..!! 

Estimated read time 0 min read

ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படம், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் பேசிய வசனம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “என்கவுன்டர் என்பது குற்றம் செய்வதர்களுக்கு கொடுக்கும் தண்டனை மட்டுமல்ல… இனிமேல் இதுபோல் நடக்கக் கூடாது என்பதற்காக எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்ற அவரது வசனம், என்கவுன்டரை ஆதரிக்கும் விதமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வசனம், சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு பக்கம், என்கவுன்டர் மூலம் குற்றங்களை ஒழிக்க முடியும் என்ற கருத்தை ஆதரிப்பவர்கள் இருக்க, மற்றொரு பக்கம் இது சட்டத்தை தாண்டிய செயல் என்றும், இதுபோன்ற கருத்துக்கள் சமூகத்தில் தவறான செய்திகளை பரப்பும் என்றும் கருத்து தெரிவிப்பவர்களும் உள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author