வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் – சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கணிப்பு!

Estimated read time 1 min read

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்கும் எனவும், வட கடலோர மாவட்டத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலை குழுமம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் RUN FOR THE PLANET என்ற பெயரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள், 5 கிலோ மீட்டர் மற்றும் 2 புள்ளி 5 கிலோ மீட்டர் போட்டியில் பங்கேற்றனர். இதனை சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காலநிலை மாற்றத்திற்கு காரணம் கரிமள வாயு அதிகளவில் வெளியேறுவது தான் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author