திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
புரட்டாசி பிரம்மோற்சவம் ஏழுமலையான் கோயிலில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 3-ம் நாள் விழாவையொட்டி மலையப்ப சுவாமி, யோக நரசிம்மர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிம்ம வாகனத்தில் 4 மாட வீதிகளில் சுவாமி வலம் வந்தபோது செண்டை மேளம், நாதஸ்வரம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வெளிமாவட்டம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் சுவாமியை பரவசத்துடன் வழிபட்டனர். இதற்கிடையே இரவு நேரத்தின்போது முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி மற்றும் தாயார்கள் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.