சென்னை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதிய விபத்து : 19 பேர் காயம்!

Estimated read time 1 min read

சென்னை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதிய கோர விபத்தில், 19 பயணிகள் காயமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு-தர்பங்கா விரைவு ரயில், எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் மீது மோதியது. இதில், பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டுது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புப்படையினர் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவ அப்பகுதி மக்களும் முன்வந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 19 பயணிகள் மீட்கப்பட்டு  சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். விபத்து குறித்த தகவல்களை அறிய அவசர உதவி எண்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, 044 – 2535 4151, 044 – 2435 4995 ஆகிய எண்களில் தொடர்புக்கொண்டு தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author