சிவபெருமானே…! பெண்ணாக மாறி என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க… கடவுளுக்கே லெட்டர் போட்ட வாலிபர்

Estimated read time 0 min read

தமிழகத்தில் பொதுவாக ஆடி மாதங்களில் கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதே போன்று வட மாநிலங்களிலும் நடைபெறுகிறது.

குறிப்பாக இந்த மாதத்தில் வடமாநிலத்திவர்கள்‌ நீண்ட தூரம் பாதயாத்திரை செல்வது, வழிபாடு நடத்துவது போன்றவற்றை மேற்கொள்வார்கள்.

இந்நிலையில் திருமணம் ஆகாத வாலிபர் ஒருவர் கடவுள் சிவபெருமானுக்கு எழுதிய ஒரு கடிதம் தற்போது இணையதளத்தில் வைரலாகி பேசும் பொருளாக மாறியுள்ளது‌.

இந்த கடிதத்தை அவர் தபால்காரரிடம் வழங்கிய நிலையில் அதிலிருந்த முகவரியை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

ஏனெனில் அதில் சிவபெருமானின் கைலாய மலை என்று முகவரி இருந்தது. அதில் இருக்கும் தகவலை படித்த போது அவருக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது நான் பலமுறை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்தும் இன்னும் நடக்கவில்லை.

எனவே கடைசி முயற்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். எனக்கு இனி காதல் திருமணம் ஆக இருந்தாலும் சரி நிச்சயக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி எது வேண்டுமானாலும் சம்மதம் தான். எனவே சிவபெருமானே நீங்கள் பெண்ணாக மாறி என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இதற்காக ஒரு கிலோ கஞ்சாவை காணிக்கையாக தருகிறேன் என்று எழுதியுள்ளார். மேலும் இந்த கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author