பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பித்தார் பிரதமர் மோடி!

Estimated read time 0 min read

டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி  தனது பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டார்.

டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பாஜகவின் ‘சக்ரியா சதாஸ்யதா அபியான்’ என்ற அமைப்பைத் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டார் .

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், .கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற முறையில், இன்று சக்ரியா சதாஸ்யத் அபியானைத் தொடங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். இது நமது கட்சியை மேலும் வலுப்படுத்தும். கட்சியின் ‘செயலில் உள்ள உறுப்பினர்’ ஒரு சாவடி அல்லது சட்டமன்றத் தொகுதியில் குறைந்தது 50 நபர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். வரும் காலங்களில் கட்சிக்காக பணியாற்ற அவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் உடனிருந்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author