12ஆம் வகுப்பு பொதுத் தேர்வால் நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை  

Estimated read time 1 min read

அக்டோபர் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான மகளிர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால், அவர் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், தேர்வாளர்கள் அவரைத் தலைவராகத் தொடர தேர்வு செய்துள்ளனர்.

இதற்கிடையே, 21 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிச்சா கோஷ், தனது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், ஆஷா சோபனா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அதேநேரத்தில் ஆல்ரவுண்டர் பூஜா வஸ்த்ரகருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author