இந்தியாவுடன் சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான்  

Estimated read time 0 min read

26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவிடம் சமாதானக் கொடியை நீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 22 தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் புதிய தாழ்வை அடைந்த நிலையில், சேதத்தை தவிர்க்க பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்கா, சவுதி அரேயா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மூலம் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முயன்ற நிலையில், அது பலனளிக்காததால், தற்போது இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யா மூலம் முயற்சிப்பதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதல் 2019 இல் புல்வாமாவிற்குப் பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author