மூத்த அதிகாரிகளுக்கான கல்வி அமர்வில் சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் ஷிச்சின்பிங் வலியுறுத்தல்
மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு கல்வி அமர்வில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செவ்வாய்கிழமை பேசுகையில், சீரான மற்றும் நிலையான முறையில் சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் கட்சிப் பள்ளியில் (தேசிய ஆட்சி கல்லூரி) அமைச்சர் நிலையிலான முக்கிய அதிகாரிகளுக்கான கல்வி அமர்வின் துவக்க நிகழ்ச்சியில் முக்கிய உரைநிகழ்த்திய ஷிச்சின்பிங் இதைச் சுட்டிக்காட்டினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வில் உருவாக்கப்பட்ட விரிவான சீர்திருத்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவது என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த கல்வி அமர்வு 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச அமைப்புமுறையை தொடர்ந்து முழுமைப்படுத்துவது, தேசிய நிர்வாக அமைப்புமுறை மற்றும் நிர்வாகத் திறனுக்கான நவீனமயமாக்கலை முன்னெடுப்பது ஆகிய ஒட்டுமொத்த இலக்குகளைப் பின்பற்றி, இந்த இலக்குகளை நோக்கி சென்று, உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.