நவ.28ல் தாயகம் திரும்புகிறார் அண்ணாமலை!

Estimated read time 0 min read

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை, தானது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அங்கு லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் (செப்டம்பர், அக்டோபர், நவம்பர்) பயின்று வருகிறார்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல், அறிவியல் குறித்த புத்தாய்வுப் படிப்பில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், லண்டனில் இருந்து நவம்பர் 28ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தாயகம் திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நவ. 29இல் சென்னை பாஜக அலுவலகத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் அண்ணாமலை பங்கேற்கிறார் என்றும், நவ.30இல் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அணைத்து கிராமப்புறங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்திக்க உள்ளார். இதனிடையே, தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்று முடிந்திருப்பதால், அவர் வந்ததும் அரிசியல்
சூடுபிடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author