இந்தியாவில் 1961 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, ‘வருமான வரிச் சட்டம் 2025’ ஏப்ரல் 1 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் வரி விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இதுவரை குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ‘மதிப்பீட்டு ஆண்டு’ மற்றும் ‘முந்தைய ஆண்டு’ போன்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, இனி ‘வரி ஆண்டு’ என்ற ஒரே சொல் மட்டுமே பயன்படுத்தப்படும்.
இது வரி தாக்கல் செய்பவர்களுக்குப் பெரும் வசதியாக அமையும்.
வருமான வரியிலிருந்து ரயில் டிக்கெட் வரை; ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுகிறது
