அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தி வரும் தடை என்பது, மனிதாபிமானமற்ற மற்றும் ஆதிக்கம் மிக்க கருவியாக திகழ்கிறது. ஈரான் மீது 40 ஆண்டுகளுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பயனற்றதாக உள்ளதை உண்மை நிரூபித்துள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அண்மையில் தெரிவித்தார்.
சீன ஊடகக் குழுமத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சிறப்பு நேர்காணலை அளித்த அராக்சி கூறுகையில்
தடைக்கு எதிராக, ஈரான் பெரிய விலை கொடுத்துள்ளது. ஆனால், தன் திறமைகளைச் சார்ந்திருக்கும் முறையில் வளர்ச்சி அடைய நாங்கள் பாடுபட்டு வருகிறோம். தடை விதிக்கப்பட்ட சூழலில், அணு ஆற்றல், தேசிய பாதுகாப்பு, தொழிற்துறை மற்றும் பிற துறைகளிலும் ஈரான் பெற்றுள்ள முன்னேற்றங்களை கண்டுள்ளோம் என்று சுட்டிக்காட்டினார்.
பாலஸ்தீனம்-இஸ்ரேல் பிரச்சினைக்கு தீர்வு கண்டு போர் நிறுத்தம் அடைவதற்காக பன்னாட்டுச் சமூகத்தின் முயற்சி குறித்து அராக்சி பேசுகையில்
சில மேற்கத்திய நாடுகளின் செயல்களில் இருந்து, அவை, சர்வதேச சட்டம், மனித உரிமைகள், மனிதாபிமானம் போன்ற எந்த வரையறைகளையும் பின்பற்றாது. உரத்த குரலில் எடுத்துரைத்த போதிலும், காசா பகுதியில் பத்தாயிரம் கணக்கானோர் உயிரிழப்பு குறித்து அவர்கள் மௌனமாகவே இருந்தனர். ஐ.நா. பாதுகாப்பு அவைக் கூட்டத்திலோ அல்லது. ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்திலோ போர் நிறுத்தத்திற்கு ஆதரவான எந்த தீர்மானத்தை முன்னெடுக்கவில்லை, இஸ்ரேல் மீது எந்த தடைகளையும் விதிக்கவில்லை. ஐரோப்பா மற்றும் மேற்குலகம் எடுத்துள்ள இரட்டை நிலைப்பாடு மிகவும் தெளிவானது. சொந்த நாட்டு மக்களிடையே எழுந்துள்ள குரலுக்குக் கூட, அவர்கள் பதில் அளிக்க முடியாது. ஐ.நா. பாதுகாப்பு அவையில், அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முடியவில்லை. இஸ்ரேல் தொடர்ந்து போர் தொடுப்பதை தடுக்கவும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் மீது அழுத்தம் விதிக்கவும் வேண்டிய தார்மீகப் பொறுப்பு பன்னாட்டுச் சமூகத்திற்கு உண்டு என்று வலியறுத்தினார்.