உலக வளர்ச்சி முன்மொழிவுக்கான நண்பர்களின் குழுவுக்கும் ஐ.நா அமைப்பு முன்மொழிவு ஊக்குவிப்பு பணிக்குழுக்குமிடையிலான கூட்டம் 9ஆம் நாள் ஐ.நாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. ஐ.நாவுக்கான சீனாவின் துணை நிரந்தரத் பிரதிநிதி கங் சுவாங் இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
கடந்த 3 ஆண்டுகளில், உலக வளர்ச்சி முன்மொழிவு, சீனாவின் கருத்தில் இருந்து சர்வதேச ஒத்த கருத்தாக மாறியுள்ளது.
ஒத்துழைப்பு திட்டத்திலிருந்து, கூட்டு நடவடிக்கையாக இதுவே மாறியுள்ளது. அதிக வளரும் நாடுகள் இதிலிருந்து நலன் பெற்றுள்ளன. உலக வளர்ச்சி முன்மொழிவுக்கான நண்பர்களின் குழுவும் ஐ.நா அமைப்பு முன்மொழிவு ஊக்குவிப்பு பணிக்குழுவும் கூட்டாக முயற்சி செய்து, பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, வளர்ச்சி திட்டத்தில் கவனம் செலுத்தி, கூட்டாளியுறவை வலுப்படுத்தி,
2030ஆம் ஆண்டு திட்டத்திற்கு மேலதிகமான பங்காற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கங் சுவாங் தெரிவித்தார்.