38-வது தேசிய விளையாட்டு போட்டி – தங்கம் வென்றார் டேபிள் டென்னிஸ் வீராங்கனை செலினா!

Estimated read time 1 min read

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீராங்கனை செலினா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்..

38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனை செலினா, மகாராஷ்டிராவின் அனுபவ ஸ்வஸ்திகாவை எதிர்கொண்டார். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய செலினா, முதல் 2 செட்டை கைப்பற்றினார்.

ஆனால் அடுத்த 3 செட்களிலும் மகாராஷ்டிர வீராங்கனையிடம் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு விளையாடிய செலினா, கடைசி 2 செட்டை வசப்படுத்தினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு 4-க்கு 3 என்ற செட் கணக்கில் செலினா வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிசில் தமிழக வீரர் சத்யன், மகாராஷ்டிராவின் ஜாஷ் மோடியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் 3-க்கு 4 என்ற அதிர்ச்சித் தோல்வியை சந்தித் சத்யன், வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author