தமிழ்நாட்டில் மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.
இதனால் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது. அதன் பிறகு பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 11ஆம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை.
இந்நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் இதன் காரணமாக மார்ச் 4ஆம் தேதி தமிழகத்தில் மொத்தம் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.