நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா

Estimated read time 0 min read

நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழாவில் 8ம் நாள் குதிரை வாகன வீதி புறப்பாடு. நாங்குனோி மதுரகவி வானுமாமலை ஜீயா் சுவாமிகள் மங்களாசாசனம்.

108 வைணவத் திருத்தலங்களில் பாண்டிய நாட்டு திவ்யதேசங்களில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது வானமாமலை (நாங்குநேரி) திவ்ய ஷேத்திரம். ஸ்ரீவரமங்கைத் தாயார் சமேத வானமாமலைப் பெருமாள் இங்கு அருள் பாலிக்கிறார். மூலவா் சுயம்புவாக தோன்றியவர். திருமலை திருப்பதியில் இருந்து இங்கு எழுந்தருளிய ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கும், பெருமாளுக்கும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் பங்குனி திருக்கல்யாண திருவிழா என ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி அந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் எட்டாம் திருநாளான இன்று மாலை ( அஸ்வ ) குதிரை வாகன புறப்பாடு நடைபெற்றது. ஸ்ரீ தெய்வநாயகப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் ஏழுந்தருள ஸ்ரீவரமங்கை தாயாா் ஷேஷ வாகனத்தில் ஏழுந்தருளி காட்சி அளித்தனா். நாங்குனோி மதுரகவி வானுமாமலை ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருளியதும் சுவாமிக்க கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

அதனை தொடா்ந்து ஜீயா் சுவாமிகளுக்கு பாிவட்டம் கட்டி மாலை அணிவித்து மாியாதை செய்யப்பட்டது. ஜீயா் சுவாமிகளும் பிரபந்ததாரா்களும் திராவிட வேதமான திருவாய்மொழியை பாடிபடி முன்னே செல்ல சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது. பெருமாள் தாயாருக்கு பக்தர்கள் பழம் பூ மாலை சமா்பித்து வழிபட்டனர்.

குதிரை வாகனம் முக்கிய வீதிகளில் உலா வந்த பின்னர் மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author