சர்வதேசச் சட்டத்தின் அதிகாரத்தைப் பேணிக்காப்பதற்கான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து 8ஆம் நாள் சீனாவும் ரஷியாவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.
கூட்டறிக்கையில் புதிய யுகத்திற்கேற்ற பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தின. அதோடு, ஐ.நா சாசனத்தைச் சீனாவும் ரஷியாவும் முழுமையாக பின்பற்றும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஐ.நா சாசனத்திற்குப் புறம்பான ஆயுத ஆற்றல் அச்சுறுத்தலைத் தடுக்கும் கொள்கையில் இரு தரப்பும் ஊன்றி நின்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தத்தமது நாட்டின் நிலைமை மற்றும் மக்களின் விருப்பத்தின்படி, வளர்ச்சி மாதிரி, அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூக அமைப்புமுறையைத் தற்சார்பின் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அம்சங்களும் இக்கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன.