சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு

Estimated read time 1 min read

சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நடவடிவடிக்கை மே 9ம் நாள் ரஷியாவில் நடைபெற்றது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உட்பட, 20க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பை ஏற்று, இதில் பங்கெடுத்துள்ளனர்.

க்ரேம்லின் மாளிகையைச் சென்றடைந்த ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் புத்தினுடன் கைக்குலுக்கி, பார்வை மேடையில் அமர்ந்தார்.

புத்தின் உரைநிகழ்த்துகையில், கோடிக்கணக்கான உயிரிழப்பு மூலம், மனித குலத்தின் அமைதி மற்றும் சுதந்திரத்தை சோவியட் ஒன்றியம் பேணிக்காத்துள்ளது.

சீன மக்களும், ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடினர். மனித குலத்தின் பொது எதிர்காலத்தைத் திறந்து வைப்பதில் சீன மக்கள் ஆற்றிய பங்கை வெகுவாகப் பாராட்டுகிறோம்.

2வது உலக போர் வரலாற்றை நினைவில் வைத்துக் கொண்டு, வரலாற்றைப் படிப்பினையாகக் கொள்கிறோம். வரலாறும் நியாயமும் எப்போதும் எங்கள் பக்கத்தில் நிற்கும் என்று தெரிவித்தார்.

அதற்குப் பிறகு பிரமாண்டமான அணிவகுப்பு தொடங்கியது. சீனா உள்ளிட்ட 10க்கும் மேலான வெளிநாட்டு அணிகளும் அழைப்பை ஏற்று அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளன.

கொண்டாட்ட நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, ஷிச்சின்பிங் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் எலிக்சன்டர் பூங்காவுக்குச் சென்று, பெயர் தெரியாத தியாகிகளின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து, மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author