புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங் சிந்தனை மற்றும் உலகம் என்ற தலைப்பிலான சர்வதேசக் கருத்தரங்கம்
புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங் சிந்தனை மற்றும் உலகம் என்ற தலைப்பிலான சர்வதேசக் கருத்தரங்கம் 9ஆம் நாள் நிங்சியாவின் யின்ச்சுவான் நகரில் நடைபெற்றது. நவீனமயமாக்கல் மீதான பாதையில் சீனாவின் வறுமை ஒழிப்பு கோட்பாடு மற்றும் நடைமுறையின் சாதனை என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 120க்கும் அதிகமான வெளிநாட்டு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கூறுகையில், வறுமை ஒழிப்பில் சீனா வரலாற்று சாதனையைப் பெறுவது என்பது, மனிதகுல நாகரிகத்தின் முன்னேற்றத்தில் மைல்கல் சாதனையாகும் என்றும், கற்றுக்கொள்ளத்தக்க மதிப்புமிக்க அனுபவங்களை சீனா வளரும் நாடுகளுக்கு வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தனர்.
