இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், இன்று மாலை 5:00 மணி முதல் நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன.
அதேநேரம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியை மீண்டும் வலியுறுத்திய இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.
“பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. இதை தொடர்ந்து மேற்கொள்ளும்.” என்று ஜெய்சங்கர் கூறினார்.
போர் நிறுத்தம் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.